அருள்மிகு அங்காள ஈசுவரி உடனாய வாலகுருநாதன் திருக்கோயில்
Saturday 14 January 2017
வால குருநாதன்
அருள்மிகு வாலகுருநாதன்
பதில்:-
முதலில் நாதனில் இருந்து தொடங்குவோம். நாதன் என்ற சொல்லுக்குத் தலைவன், இறைவன் என்ற பொருள்கள் உண்டு.
குரு என்ற சொல்லுக்கு ஆசிரியன் (ஒளியை ஏற்றுபவன்). அதாவது அறியாமை என்னும் இருளை ஓட்டுபவன்.சூரியஒளி வந்தவுடன் எப்படி புறஇருள் விலகுகிறதோ அதைப்போல அகஇருளைப் போக்குபவன் குரு.
வாலறிவு என்ற சொல்லுக்கு பேரறிவு என்று பொருள். கடவுளுக்கு எட்டு குணங்கள் உண்டு. அதில் ஒன்று இந்த முற்றறிவாகிய பேரறிவு. அதனால்-தான் தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருக்குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் 2 ஆவது குறளில்
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் என்றார்.
அதாவது பேரறிவுடைய இறைவனின் திருவடிகளைத் தொழாதவர்கள் நூல்களைக் கற்று என்ன பயன் என்றார்.
வால என்ற சொல் “பெரிய” அல்லது “முற்றும் அறிந்த” என்ற பொருளில் வரும்.
ஆக, வாலகுருநாதன் என்ற சொல்லுக்கு “முற்றும் அறிந்த குருவாகிய இறைவன்” என்று பொருள்.
(எழுதியது - மா.கருப்புசாமி 94440 79926 / 95000 45865)
Subscribe to:
Posts (Atom)